Monday, March 14, 2022

அல்ஹாஜ். எம்.எஸ்.புகாரி--ஆசிரியர்---- எம்.எம். ஆதம்பாவா.

 

அல்ஹாஜ். எம்.எஸ்.புகாரி--ஆசிரியர்

இம்மை- 19.03.1948.............இன்மை- 31.07.2010

 

எம்.எம். ஆதம்பாவா.

 

35வருடங்கள் நல்லாசிரியராக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி மாணவர்கள் பெற்றோர்கள் சக ஆசிரியர்களின் மனங்களில் அழியா இடம்பெற்ற கடமையுணர்வுää நேர்மைää தியாக உணர்வுää அடுத்தவரை மதிக்கும் பண்பு ஆகிய அருங்குணங்களை அணிகலனாகக் கொண்ட அல்ஹாஜ். எம்.எஸ்.புகாரி தனது 62வது வயதில் காலமானார்.

 பரந்த அறிவு தெளிந்த சிந்தனை முன்மாதிரியான நடத்தை ஆற்றல்ää துணிச்சல்ää புத்திக் கூர்மைää நேரமுகாமைத்துவம்ää கவர்ச்சியான கற்பித்தல் அழகுபடுத்தல்ää கற்பனா சக்திää கலையுள்ளம்ää மனஉறுதிää எப்போதும் தனக்குச் சரியெனப்பட்டதை தயக்கமின்றிக் கூறுதல்ää ஆகிய ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருந்தார்.

 சாய்ந்தமருது சேக்குனாலெவ்வை முகம்மது சதக் ஆதம்பாவா சபியா உம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராக 19.03.1948ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அன்றைய அல்ஜலால் வித்தியாலயம் (ஆலமரத்தடிப்பள்ளி) யிலும்ää இடைநிலைக்கல்வியை கல்முனை பாத்திமாக் கல்லூரிää உவெஸ்லி உயர்தரப் பாடசாலைää சாகிராக் கல்லூரி ஆகியவற்றிலும் கற்றார். 11.12.1978ல் கணிதவிஞ்ஞான ஆசிரியராக மஹ்முத்மகளிர் கல்லூரிக்கு நியமனம் பெற்றார். அஸ்ஸிறாஜ் வித்தியாலயம்ää (சாளம்பைக்கேணி)ää சம்ஜஸ்இல்ம் மகாவித்தியாலயம் (மருதமுனை) ஆகியவற்றிலும் ஆசிரிய சேவையை ஆற்றி உள்ளார்.

 1978ல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கணிதநெறிப்பயிற்சியை முடிப்பதற்காகச் சென்றிருந்த போது சம்பளத்துடனான கற்கை விடுமுறையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறைக்குத் தோந்தெடுக்கப்பட்டு 1982ல் கலைப்பட்டதாரியானார். 1992ல் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை நிறைவு செய்து ஆங்கிலத்திலும் டிப்ளோமா சான்றிதழை பெற்றிருந்தார். 26.06.1996 தொடக்கம் 23.03.1998 வரை முறைசாராக் கல்வி இணைப்பாளராகக் கடமையாற்றினார்.

 சிறந்த முகாமையாளர் அழகியல் கலையில் ஆர்வமுடையவர். மேடை அலங்காரம் தோரணம் சித்திரக் கண்காட்சிää பொருட்காட்சிää பூந்தோட்டம்ää கிறீன்ஹவுஸ்ää விலங்கியல் பூங்காää நிர்வாகக் கட்டடத்தின் நுழைவாயில்ää வடிவமைப்புää புகைப்படமெடுத்தல்ää போன்ற அனைத்து அம்சங்களிலும்ää மஹ்முத் மகளிர் கல்லூரியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு தடம் பதித்தார்.

 தனது நகைச்சுவைப் பேச்சுக்களால்ää எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் வல்லவர். அபாரமான ஆற்றல் ஆக்கபூர்வமான சிந்தனைää வினைத்திறனுடன் செயலாற்றுவதில் திறமைää ஆகிய பண்புகள் அவரிடம் சிறப்பாகக் காணப்பட்டன.

 மஹ்முத் மகளிர் கல்லூரியில் 18.03.2008ல்ஓய்வு பெற்றபோது கொடி சஞ்சிகைää பிரியாவிடை வைபவச் சிறப்பு மலர் வெளியிட்டுக் கௌரவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

 கல்லூரியின் கொடிää கல்லூரி இலச்சினை என்பவற்றை வடிவமைத்த பெருமை இவரையே சாரும். பாடசாலை ஒழுக்கக் கோவை தயாரிப்பும் இவருடையதே.. ஆசிரியர் நலன்புரிக் குழு யாப்பு உருவாக்கியது ஒரு வரலாற்றுச் சான்றாகும். ஆசிரியர் நலன்புரிச்சங்கத் தலைவராக விளையாட்டுக்குழுத் தலைவராக பகுதித் தலைவராக முகாமைத்துவக் குழு உறுப்பினராக சஞ்சிகைக்குழு அங்கத்தவராக பல்வேறு பணிகளில் அயராது பாடுபட்டுழைத்தார்.

 தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த குடும்பஸ்தராக மிளிர்ந்தார். 28.07.1978ல் ஐ.எல். ஹபீபாவை திருமணம் செய்தார். இவர்களின் இல்லறச் சோலையில் பூத்த இனிய மலர்கள் ஐந்து ஆண்மக்களாவர். இவர்கள் கல்வியில் முன்னேறி நன்னிலையில் உள்ளனர். . வல்லநாயன் இவரின் சேவைகளைப் பொருந்தி ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக….00

 நவமணி-

No comments:

Post a Comment