எப்.எம். தவிர்.!
ஆர்.எம். நௌஷாத்
நீண்ட காலத்தின் பின்னர். எனது நன்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது
அவர் இலங்கை அங்கொட மனநலமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்;;;;விற்று அதிர்ந்து போனேன். நன்றாக இருந்த மனிதருக்கு நேர்ந்த கதிபற்றி அறிய
நேரே வைத்தியசாலைக்கே சென்று சந்தித்தேன். மனிதர் கட்டிலில் இருந்தவாறே
திருதிருவென முழித்துக் கொண்டும் கட்டிலைப் பிராண்டிக் கொண்டும் தனக்குள்ளேயே
சிரித்துக் கொண்டுமிருந்தார். மனைவி பக்கத்தில் கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
என்னைக் கண்டதும் ஒரளவு நிம்மதியடைந்தாள். ~~என்ன நடந்தது..?|| என்று கேட்டேன். ~~பெரிசா ஒண்டுமில்ல தம்பி.. இந்த மன்ஸன் போன கிழமயெல்லாம் பரபரப்பான செய்திகள்
கேட்கவேண்டுமென்று ரேடியோவை கேட்டுக் கொண்டிருந்தவர்.. குறிப்பாக ~அப்பம் எப்.எம்.| என்ற வானொலிஅலைவரிசையைத் தொடர்ந்து ஒரு கிழமையாகக் கேட்டுக்
கொண்டிருந்தவர்..திடீரென்று இப்படி ஆயிற்று...|| என்றாள்.
இனி வானொலி மூடும்வரை இதே வேலைதான். ~~ஹல்லோ..புஸ்பாராணி..? ம்.... அண்ணா..! கணவர் வெளிநாட்டிலா...? ம் அண்ணா..!.. உங்கள் (புதுவருடப்) பணியாரம் எப்படி..? எனக்குத்தருவீங்களா..? ;க்கிக்க்கிக்கீய்... புஸ்பராணி நான் உங்களுக்கு இப்ப குத்து தருகிறேன்.. ஆமாம்..இதோ.. பாடல்...! அடுத்த நேயரை இணைக்கிறோம்.. ஹெல்லலோவ்.. மாயாவா.?. ஓம் சேர்..! அங்க காலநிலை எப்படி..? மழையா... இல்லை சேர்..! வெயிலா...? இல்லை சேர்..! சரிசரி.. சாப்பிட்டீங்களா..? ஒம் சேர்..! யார்யாருக்கு பாடல் வேண்டும்..? சேர்.. உங்களுக்கும் மற்றும் எங்கட அப்பா..அம்மா..தம்பி.. தங்கை.. மச்சினி.. அம்மம்மா.. பாட்டன்.. பாட்டி.. மற்றும் கலையுலக நண்பர்கள்.. எண்ட ~பெஸ்ற் பிரண்ட்| திவ்யா மற்றும் அவட கஸ்பெண்ட்.. அன்டடி.. பிரதர்.. சிஸ்டர்..அங்கிள்..மற்றும் எங்கட ~ஸ்கூல்மேற்று|கள் மாலா தாலா பாலா.. ஊலா மற்றும் என்னை விரும்புவோருக்கும் ..மற்றும் நான் விரும்புவோருக்கும்... மற்றும் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும்.. இதோ அனைவருக்குமாக வருகிறது.. குத்து படத்த்pல் சிம்பு பாடிய ரீமிக்ஸ் பாடல.;.. அதற்கு முன் இன்னொரு நேயர் இணைகிறார்.. யாரென்று பார்ப்போம்.. ஹெலோ.. ? அலோவ் சேர். நான் பசறிச்சேன பரிது.. ஙா.. எங்கட அபிமான நேயர்.. அங்க மழையா.. ஒம் ஸேர்.. வெயில் இல்லை அப்படித்தானே..? ஓம் சேர்.....................
இப்படியே நாள் முழுவதும் இதே பாணியிலான பேச்சுக்கள்.. காட்டுக் கத்தல்கள்.. இதனை ஒரு மனிதன் ஒரு வார காலமாகத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தால் பைத்தியம் பிடிக்காமலிருக்குமா என்ன..?
௦௦௦௦
No comments:
Post a Comment