Monday, March 14, 2022

பாவலர் பஸீல் காரியப்பரின் அழகான ஒரு சோடிக் கண்கள். தீரன். ஆர்.எம். நௌஸாத்.

 காலத்தால் அழியாத ஈழத்துக் கீதம்.

 பாவலர் பஸீல் காரியப்பரின் அழகான ஒரு சோடிக் கண்கள்.

தீரன். ஆர்.எம். நௌஸாத்.


~~அழகான ஒரு சோடிக் கண்கள்.- அவை

அம்புகள் பாய்ச்சி என் உளமெல்லாம் புண்கள்.

  புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஐயா அவர்களால்ää ~பாவலர்| பட்டம் பெற்றவர்ää கலாநிதி எம். ஏ. நு..;மான் அவர்களால்ää ~அரும்பு மீசைத் தத்துவஞானி..!| என புகழ்ந்துரைக்கப்பட்டவர்...தமிழறிஞர் திரு வே. அருளையா அவர்களால்ää ~எழுக புலவனே..!| என வாழ்த்தப்பட்டவர்ää தமிழ்த்துறைத் தலைவர்.ää றமீஸ் அப்துல்லா அவர்களால்ää ~~காணாமற்;போன ஒரு தங்கக் காசு..!|| என வர்ணிக்கப்பட்டவர்....பாவலர் பஸீல்காரியப்பர்!

 இத்தகைய பாவலர் எழுதியää ‘அழகான ஒரு சோடிக் கண்கள்கவிதை பற்றி அறியார் இருக்க முடியாது. அது மெல்லிசைப் பாடலாக ஒலிபரப்பாகும் போதுää அதனை முணுமுணுக்காத ஒரு இதயமும் இல்லை. ஈழத்தின் இசைமாமேதை திரு. எம்.ஏ. றொக்சாமி அவர்களின்ää இசையமைப்பில்ää மெல்லிசை வித்தகர்ää திரு. எஸ்.கே. பரராஜசிங்கம் அவர்களின்ää மதுரமான குரலில்ää ஒலித்தது இந்த அற்புதமான பாடல். இக்கவிதையின் பின்னணிக் கதையே ஒரு நாவல் எழுதுமளவுக்கு விரிவானது. அதன் கதைச் சுருக்கத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவது தகும்.

 இக்கவிதையின் முழுமூலத் தலைப்பு ஒரு சோடிக் கண்கள்என்பதாகும். இது 1956ம் ஆண்டுää பாவலரதுää மாணவப் பருவத்தில்ää முதன்முதலாக அவர் படித்த பாடசாலைக் கரும்பலகையில் அவரால் எழுதப்பட்டது. அவருக்கு உயர்தர வகுப்புக்குப் பாடம் எடுத்தää ஆசிரியையின் சுழலும் கண்களுக்காகவே எழுதினார். இதற்காக மாணவப் பருவத்தில்ää சக மாணவர்களினதும்ää மற்றும்ää சில ஆசிரியர்களினதும்ää ;குறும்புத்தனமான இரசனைக்குள்ளானார். 

இதன் பிறகுää 1966ல்ää பாவலர் ரயில் பிரயாணமொன்றின் போதுää தன்னுடன்ää மட்டக்களப்பு தொடக்கம்ää கொழும்பு வரைää பேசிக் கொண்டு வந்த கறுப்புக்கண்ணாடி அணிந்த ஒரு பெண்ää இறங்க எத்தனிக்கும் போது. தடுமாறியதையும்ää அப்பெண் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிய போதுää கண்களிரண்டும்ää இல்லாதிருப்பதையம் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சமயம்ää அவருக்கு இந்த ஒரு சோடிக்கண்கள்கவிதை ஞாபகத்தில் வரää ரயிலில் அமர்ந்தபடியேää பத்துவருடங்களுக்கு முன் எழுதப்பட்டதை நினைவு கூர்ந்துää மறுபடியும்ää அவ்விடத்திலேயே அதனை எழுதி முடித்துää அதற்கு கண்ணூறுஎன்ற தலைப்பிட்டுää தினகரன் பத்திரிகைக்கு அனுப்பி விட்டார். பின் அதனை மறந்தும் போனார். இக்கவிதை 19.08.1966 ல் தினகரனில் பிரசுரமானது கூடப் பாவலருக்குத் தெரியாது. சில நாட்களின் பின்னர் பாவலரின் இலக்கிய அன்பர் ஒருவரே இப்பத்திரிகை நறுக்கை பாவலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

 பல காலங்கள் கடந்த பின் பாவலர் ஒருநாள் தன் கிராமத்து வயல்வெளிகளில் உலவிவிட்டுää பக்கத்திலுள்ள தேநீர் கடையொன்றுக்குச் சென்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதுää இக்கவிதை ஒரு விளம்பர நிகழ்ச்சிக்கான மெல்லிசைப் பாடலாகää ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாடலின் முடிவில்ää அறிவிப்;பாளர்ää ~~பாடலைப் பாடியவர். எஸ்.கே. பரராஜசிங்கம். இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை.|| என்று அறிவிப்புச் செய்தார். இதனைக் கேட்ட பாவலர்ää புன்முறுவலுடன் வாளாவிருந்து விட்டார். தன்னிடம்ää தினகரன் பத்திரிகை நறுக்கு முதலான ஆதாரங்கள் இருந்தும்ää அதனை இலங்கை வானொலிக்கு அறிவிக்கவுமில்லை. அப்பாடல்ää இயற்றியவர் பெயர் தெரியாமலேயேää மேலும்ää பன்னிரெண்டு வருடங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. 

பின்னர் இதன் படைப்பாளி யாரெனத் தெரிய வந்த சந்தர்ப்பம் மிக்க சுவாரஸ்யமானது. அச்சம்பவத்தை சிரேஸ்ட அறிவிப்பாளர்ää பீ.எச். அப்துல்ஹமீது அவர்களின் சொற்களில் காண்போம்.

 பஸீல் காரியப்பர் அவர்கள் பாவலர் பட்டம் பெற்ற காலகட்டம். ஒரு நாள் இவர் வானொலி நிலையம் வந்திருந்தார். அவ்வேளையிலேயே இவரைப் பேட்டி காண ஏற்பாடாகியிருந்தது. நிரலில் இருந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பதிலாகää பாவலரின் பேட்டி நேரடி ஒலிபரப்பாக இடம் பெற்றது. நானேää அவரைப் பேட்டி காண வேண்டும் என்றும் வேண்டப்பட்டேன். சுவாரஸ்யமான ஒரு பேட்டி அது. அதில் கடைசியாக ஒரு கேள்வி. இவ்வளவு ஆற்றலுள்ள தாங்கள் ஏன் எங்கள் நிலையத்திற்கு மெல்லிசைப் பாடல் ஒன்றாவது எழுதவில்லை.? நான் கேட்டேன். புன் சிரிப்புப் பூக்க பாவலர் சொன்னார். எழுதியிருக்கிறேனே.. பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிறதே.. எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய அழகான ஒரு சோடிக் கண்கள்..!அவர் சொல்லக் கேட்டதும்ää என்னையறியாமலேயே இருக்கையை விட்டும் எழுந்து விட்டேன். இன்ப அதிர்ச்சி எனக்கு.

 பாடல் பதிவாகி ஒலிபரப்பு நடந்தது 1966ல். பேட்டி நடந்தது 1978ல். பன்னிரண்டு ஆண்டுகள் பாடலாசிரியர் யாரென்று அறியப்படாமலேää இலங்கையிலும்ää இந்தியாவிலும் இப்பாடல் பிரபலமானது. எழுதிய பாவலரே இதை அறியத் தந்திருக்கலாமே..ஏன் செய்யவில்லை..?” என்று கேட்ட போதுää “நேயர்கள் இரசிக்கிறார்கள். நிலையம் ஒலிபரப்புகிறது. சந்தோஷம்.. கவிஞன் காணாமல் போய்ää கவிதை தனியாக ரசிக்கப்படுவதை அனுபவித்தவாறு அடங்கிப் போய்ää இருப்பது ஒரு சுவையான அனுபவம்.என்றுää புன்சிரிப்புடன் கூறினார். தனக்குக் கிடைக்க வேண்டியää நியாயமான புகழைக் கூடää இலட்சியம் செய்யாத இந்த மனிதரை என்னவென்பது..? பேட்டி முடிந்ததும்ää பாவலரை நேரே இசைத்தட்டுக்கள் வைப்பகத்திற்கு அழைத்துச் சென்றேன். அழகான ஒரு சோடிக் கண்கள்.இசைத் தட்டை எடுத்து டுலசiஉள என்ற இடத்தில்ää பாடல் இயற்றியவர் பாவலர் பஸீல்காரியபபர் என்ற அவரது நாமத்தை நானே எழுதும் நல் விதி பெற்றேன்…”

 புவியியல் கற்றிடும் வேளை- அவை

புகையுள்ளே மின்னிச் சிரித்திடுங் காலை

தவித்துத் துடிப்பதென் வேலை

தங்குவதெங்கே மனமொரு பாலை.

 இச்சம்பவத்தின் பின்னர்ää ~அழகான ஒரு சோடிக் கண்கள|; மேலும் பிரபல்யமாகி இலங்கையின் பட்டிதொட்டி எங்கும் பிரபல்யம் பெற்றது. இப்பாடலையிட்டுää மூத்த அறிவிவிப்பாளர்ää திருமதி. கமலினி செல்வராசன்ää பின்வருமாறு ஞாபகம் கொள்கிறார்..

 எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். என் இள மனதைக் கவர்ந்த மெல்லிசைப் பாடல்களில்ää ஒன்று அழகான ஒரு சோடிக் கண்கள்.

 தத்துவப் பாடம் நடக்கும்- அவை

தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்.

வித்தையில் பித்துப் பிடிக்கும்.. நம்ää

வீட்டார் அறிந்தால் கன்னந் தடிக்கும்.

 என்ற அடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதிருந்தே அந்தப் பாடலின் மெட்டும் வரிகளும்ää அவ்வப்போது என் மனதில் ஒலிக்கும். எனக்குத் திருமணமான பின் ஒருநாள்ää எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு மெல்லிய மனிதரை சில்லையூரார் எனக்கு அறிமுகம் செய்தார். இவர்தான் பாவலர் பஸீல் காரியப்பர்!என்று. ஓ!. அழகான ஒரு சோடிக் கண்கள்..?” என்றேன். அன்றைய அறிமுகத்தின் பின் அவர் எனக்கு அண்ணா ஆனார். ஒரு பாசமான அண்ணணாக எப்போதும் கதைப்பார். சில்லiயூராரும்ää பஸீல்காரியப்பரும் கதைக்கத் தொடங்கினால்ää இரவு முழுவதும்ää கவிதையும்ää இலக்கியமும்தான்.. கேட்கக்கேட்க அலுக்காதவை. பாவலர் பட்டமளிப்புக்குää சம்மாந்துறைக்கு சில்லையூராருடன் வந்திருந்தேன். புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை போன்ற மாமேதைகளுடன் என்னையும் பேசச் சொன்னார்கள். பாவலர் என் கணவர் மீது கொண்ட பாசத்தை அவர்ää தன் கவிதைத் தொகுதியைச் சில்லையூராருக்கு சமர்ப்பனம் செய்ததிலிருந்து உணர்கிறேன்.. பஸீல்ää அண்ணா.. இந்த மரிக்கும் உலகுக்கு உயிரையும்ää உணர்ச்சியையும் தாருங்கள்…!”

 உண்மைதான்.. பாவலர் மரித்த பின்னர் கூட இப்பாடல் உலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருமையான பாடல்ää எத்தனையோ இதயங்களை அக்காலத்தில் இணைத்திருக்கின்றது. இப்பாடலில்ää மெய்மறந்தää பிரபல எழுத்தாளரும்ää பிரதேசச் செயலாளருமானää ஏ.எல்.எம். பளீல்ää (நற்பிட்டிமுனை பளீல்.) சொல்வதுää

 “1966ம்ää ஆண்டுக்குப் பின்னரான காலங்களில்ää க.பொ.த. சாதா. தரத்தைப் படித்துக் கொண்டு சென்ற சகலருமேää பாவலர் பஸீல் காரியப்பர் என்ற நாமத்தை உச்சரிக்காமல் விட்டிருக்க முடியாது. எனக்கும் அப்படித்தான் தெரிய வந்தது. முதன் முதலாக பஸீல்காரியப்பர் அவர்களின்ää பெயர் எனக்குத் தெரிய வந்தது அவரது இந்தப் பாடல்pன் மூலமே.! இப்பாடலின் கருத்துச் செறிவை இரசித்த முதலாவது கணத்தில்ää இது ஒரு தென்னிந்தியப் பாடலோ என்று எண்ண முடிந்;தது. இப்பாடல்ää ஒலிபரப்படும் போதெல்லாம்ää அனைத்து வேலைகளையும் நிறுத்தி விட்டுää காதுகூர்ந்து கேட்டு இரசிக்கும் நிலைக்கு ஆளோனேன். ஒவ்வொரு வரியையும்ää அணுவணுவாக இரசிக்கும் நிலையும் ஏற்பட்டது.

 இதனை யாராவது தட்டச்சு செய்தால்ää அவரும் இப்பாடலை இசையுடன் முணுமுணுத்திருப்பார். இதனைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய மனமும்ää அப்படியே ஒரு கணம் முணுமுணுக்கும். இப்படிப்பட்ட பாடலை என் இலக்கிய இரசனையோடுää அக்குவேறுää ஆணிவேறாகப் பிரித்துப் படித்து இரசிக்கும் நிலை ஏற்பட்டது.…”

 ஆட்சியியல் மறு பாடம்.-நான்

அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்.

ஆட்சி செய்யுமுனைச் சாடும்- நான்

ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்.

 கலாநிதி. எம்.ஏ. நுஃமான்ää அவர்கள்ää இப்பாடல் பற்றிக் கூறுகையில்ää “……அதன் கற்பனையும்ää உணர்வும் வாலிபத்திற்கே உரியன. நான் ஆழிச் சுழியில் மிதந்திடும் ஓடம்அழகான படிமம்……..” என்கிறார்.

 கல்முனைக்குடி கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்ää ஏ.எல்.எம். முஸ்தபா தண்டயல் அவர்கள் இப்பாடல் பற்றிக் குறிப்பிடுவது: “…….பாவலரு சேருää ந்தப் பாட்ட அவர்ர சொந்தக் கொரலில கடக்கரயில இரிந்து ஒரத்த சத்தமாப் பாடுவாரு பாருங்க.. அந்த ராகத்தää அந்த வடிவää அந்தக் கருத்த நெனச்சி நெனச்சி கேட்டுட்டேயிருப்பம்..ங்கா வாப்பா..! ச்சாää மனிசன் என்னமாக் கட்டி என்னமாப் பாடினாhரு.. பெரிய பாவலரு ல்லோ..?”

 1966ம் ஆண்டைய அதுவும்ää ஒருää இலங்கை மெல்லிசைப் பாடலைப் பற்றி 2001ம் ஆண்டுää முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் யார் ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்..? ஆனால்ää 2001.04.03.ல்ää தினமுரசு. வாரஇதழில் சிந்தியா பதில்கள்’. பகுதியில்ää வெளிவந்த ஒரு கேள்வி பதில் இது:-;.

சிந்தியா காயப்பட்டதுண்டா..?

-சுறையா ஸஹீட். மாவனல்லை.

 அழகான ஒரு சோடிக் கண்கள்..அவை அம்புகள் தாக்கி என் உடலெல்லாம் புண்கள்-

பஸீல் காரியப்பரின் பாடல்..எஸ்.கே. பராவின் குரலில்.. அந்த மாதிரியான நம்நாட்டுப் பாடல்கள்

இப்போது வருவதில்லையே என்பது மனதிலுள்ள காயம்.

 தவிரவும்ää இப்பாடல் இயற்றப்பட்டுää 43 வருடங்களுக்குப் பின்னரும்ää நினைவு கூரப்படுகிறது என்றால் இதன் ~பெறுமதி| என்னே... அதாவதுää 2008 மே மாத ஞானம் இதழில்ää விசுவமடு இந்திரசித்தன் எழுதியுள்ள ஒரு குறிப்பில்ää பின்வருமாறு உள்ளது. ~~.......திரு. அன்புமணி அவர்கள் பாண்டிருப்புக்கு அப்பாலும் சற்று நகர்ந்து இருக்கலாம். இடையிடையே வானொலியில்ää வந்து போகும்ää ~அழகான ஒருசோடிக் கண்கள்..|| என்ற பாடலின் கவிஞர் பஸீல்காரியப்பரையும் மறந்து போனார் போல் தெரிகிறது.....||

 கடற்தொழிலாளி முதல்ää கலாநிதிகள் வரை சென்றடைந்த இந்தப் பாடலை; எழுதிய பாவலரின் அழகான ஒரு சோடிக் கண்கள்;ää கடந்த 2006ல் நிரந்தரமாக மூடிக் கொண்டன. ஆயினும்ää இன்னும் ஐம்;பது வருடங்கள் சென்றாலும்ää அவரின் ~அழகான ஒரு சோடிக் கண்கள்| வாழும்..

 

தாய்மொழிப் பாடம் நடக்கும்- நறை

தாங்கிய கண்களோ மின்னலடிக்கும்

ஏய்..!என்றென்னைப் பிடிக்கும்- மனம்

எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்..?(1966)

No comments:

Post a Comment