Monday, March 14, 2022

இலங்கை தபால் துறையின் வரலாறு. ----- முகம்மது நௌஸாத் காரியப்பர்

 

உலக அஞ்சல் தினம். அக்டோபர் 09. 2010

 

இலங்கை தபால் துறையின் வரலாறு.

முகம்மது நௌஸாத் காரியப்பர்

(அஞ்சல் அதிபர். சாய்ந்தமருது.

பத்திராதிபர்- அஞ்சல் உத்தியோகத்தர்கள் சங்கம்.)

 

ஆதிமனிதன் இடம்பெயராமல் இருந்ததால் அவனுக்கு செய்திப் பரிமாற்றம் அவசியப்படவில்லை. பின்னர் ஏற்பப்ட பல்வகையான காரணிகளின் நிமித்தம் மனிதன் இடம் பெயர ஆரம்பித்தான். அச்சமயம்தான் முதல்முதலாக செய்திப் பரிமாற்றத்தின் அவசியம் உணரப்பட்டது. செய்தியை தூர இடங்களுக்கு எடுத்துச் செ(h)ல்வதற்கு ஒரு சாதனம் தேவைப்பட்டது. இதற்காக ஆதிமனிதன் முதலில் தன் குரலையே அதி வேகத்துடன் ஒலி பரப்பினான்.

 பின்வந்த காலத்தில் பல்வகையான பொருட்களினால் விதவிதமான ஒலிகளை ஒழுப்பி தன் வேறுபட்ட செய்திகளை அறிவித்தான். அம்புவில் கண்டுபிடிக்கப்ப்ட பின்னர் அம்பில் தனது செய்தியை அனுப்பி வைத்தான். அதேசமயம் இரகசியமான செய்திகளை அடிமைகள் வாயிலாகச் சொல்லியனுப்ப ஆரம்பித்தான். எழுதப்படிக்க ஆரம்பித்த காலங்களில் செய்தி அனுப்பும் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்ட்டன. இக்காலத்தில் புறாக்களும் வல்லூறுகளும் மற்றும் மிருகங்களும் கூட செய்தியை எடுத்துச் செல்லப்பயன்பட்டன. நீர்நிலைகள்ää கானகங்கள் கடந்து செல்வதற்குப் புறாக்;கள் மிகவும் உதவியாக இருந்தன. பின்னர் போக்குவரத்திற்கான பாதைகள் ஏற்பட்ட காலத்தில் மனிதனே செய்தியை எடுத்துச் செல்ல ஆரம்பித்தான். ஒருஅடிமையின் தலையை மொட்டையடித்து தலையில்; செய்தியை எழுதி மயிர் வளர்ந்த பின் அவனைக் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி அங்கு மீண்டும் மொட்டையடிக்கப்பட்டு செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு தூதுவனிடம் கொடுத்தனுப்;பப்பட்டது. கிரேக்கர்களின் இராச்சியத்தில் வாழ்ந்த மரத்தான் எனும் செய்திப்பிரிவு வீரன் ஒருத்தன் அவசரமான ஒரு யுத்தச் செய்தியை அறிவிப்பதற்காக இடைவிடாது 26 மைல்கள் தூரம் ஓடிச்சென்று செய்தியை அறிவித்த பின் முச்சிரைத்து இறந்து போனான். இவனது தியாகம் காரணமாகவே சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இன்றும் ~மரதன் ஒட்டம்| நடத்தப்படுகிறது.

 தொடர்ந்து ஒரு மனிதனை ஓடச் செய்யாமல் குறிப்பிட்ட தூரத்திற்கொரு வீரனை நிறுத்தி செய்திகள் எழுதப்பட்ட குழலைப் பரிமாறும் உத்தி கண்டுபிடிக்கப்பட்ட பின் தகவல் பரிமாற்றம் எளிதாயிற்று. ~அஞ்சல் ஒட்டத்தின்| வரலாறு இதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இந்த அஞ்சல் வீரர்கள் காடுää மலைää நீர்நிலைகள் கடந்து ஓடியே அஞ்சல் பரிமாற்றம் செய்தனர். பின்னர் தூர இடங்களுக்கு குதிரை வீரர்கள் அஞ்சல் செய்தனர். பொதுவாக உலக அஞ்சல் வரலாறு மேற்கண்டவாறு ஆரம்பித்தது.

 இலங்கை அஞ்சல்துறை

 எமது நாட்;டைப் பொறுத்தவரையில் 1500களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும் 1600களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும்ää அஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700களில் ஆஙகிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அஞ்சல்துறையில் துரித வளர்ச்சியும் அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன. குறிப்பாக இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியாரின் தகவல் பரிமாற்ற வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத தபால்சேவை கெப்டன் ஏ. கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்ப்ட்டது. அதன்பின்னர் 1804 தொக்கம் 1817ம் ஆண்டுவரை அஞ்சல்துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்த திரு. ஈ. பிளாட்டமன் அவர்கள் 1815ல் நமது நாட்டில் கொழும்பு காலி மாத்தறை திருகோணமலை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய ஆறு இடங்களில அஞ்சல் அலுவலகங்களை ஆரம்பித்தார். 1832ல் ஆசியாவிலேயே முதல்தடவையாக கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரைவண்டித் தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1838ல் இச்சேவை கொழும்புக்கும் காலிக்ககுமிடையில் விஸ்தரிக்கப்பட்டது.1850ல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் அவசர தபால்சேவை பழக்கப்பட்ட தபால்புறாக்கள் மூலம் அனுப்பப்;பட்டது. 1857.ஏப்ரல் முதலாம் திகதி 6பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரைவெளியிடப்பட்டது. (உலகின் முதல்முத்திரை இங்கிலாந்தில் 1840ல் ஒருபென்ஸ் பெறுமதியில் வெளியானது)

 இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல்தடவையாக 1865ல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸக்கும் இடையிலான தபால்புகையிரத சேவை உருவாக்கப்ப்ட்து. 1867ல் தனியாருக்கான தபால்பைää தபால்பெட்டிää சேவைகள் கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்ன. 1872 ஓகஸ்ட் 22ல்தான் முதன்முறையாக தபால்அட்டை வெளியானது. 1873ல் கொழும்புக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான காசுக்கட்டளை சேவை ஆரம்பிக்கப்படடது. 1877ல் உள்நாட்டு காசுக்கட்ட்ளைச் சேவை ஆரம்பிக்கப்ப்டதிலிருந்தும்ää 1877 ஏப்ரல் 1ம் திகதி இலங்கை அகிலதேச அஞ்சல் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டதிலிருந்தும்ää தபால்துறை துரித அபிவிருத்தி காணத் தொடங்கியது. 1880ல் இலங்கை இந்திய காசுக்கட்டளை சேவை தொடங்கியது. 1885.மே 1ல் அஞ்சல்அலுவலக சேமிப்பு வங்கியும் ஆரம்பமானது.1893ல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது. 1895.ஓகஸ்ட் 19ம் திகதி கொழும்பு பிரதம அஞ்சல்அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 பின்னர் 1913 தொடக்கம் 1923 வரை இலங்கையில் அஞ்சலதிபதியாக இருந்த திரு. எப்.ஜே. ஸ்மித் அவர்கள் முதல்முறையாக 6 உப தபால் அலுவலகங்களை அக்மீமனää திவுலப்பிடடியää ஆனமடுவää கிரியெல்லää மூதூர்ää சிலாபத்துறை ஆகிய ஆறு இடங்களில் அமைத்தார். 1928ல் இங்கையின் முதலாவது வான்கடிதம் மாஸெல்ஸ் நகரத்திற்கு விமானத் தபால் வாயிலாகப் பறந்தது. 1936ல் அஞ்சல்அறிமுக அட்டை விநியோகம் செய்யப்பட்டதும்ää இங்கிலாந்திலிருந்து நத்தார் தபால்கள் விமானம் மூலம் இலங்கையை அடைந்ததும்; குறிப்பிடத்தக்கன.

 947 இலேயே இலங்கை நாட்டவர் ஒருவர் (திரு. ஏ.இ. பெரேரா) அஞ்சல்அதிபதியாக நியமனம் பெற்றார்.இதனைத் தொடர்ந்து 1949ல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வான் தபால்சேவை ஆரமபித்தது. 1958ல் இலங்கை போக்குவரத்துச்சேவையுடன் இணைந்து தபால் பஸ் சேவை தினமும் ஓடத் தொடங்கின. இதனால் இலங்கை மக்கள் அனைவருக்கும் தபால்சேவை தங்குதடையின்றிக் கிடைத்தன.

 1967சனவரி1ல் இலங்கை முத்திரைப்பணியகம் ஸ்தாபிக்கப்பட்டது. செப்டமபர் மாதம் முதல் முத்திரைக் கண்காட்சி மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. 1972ல் முத்திரைகளை வெளியிடும் பணி முத்திரைப் பணியகத்திற்கு வழங்கப்பட்டது. 1975ல் அஞ்சல்அதிபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக வெள்ளவத்தையில் அஞ்சல்பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்ப்டது. 1979ல் பிராந்தியங்கள் ரீதியாகத் தபால்தரம் பிரிக்கும் நிலையம் இரத்தினபுரியில் முதலாவதாக ஆரம்பிக்கப்படதும் தபால்கள் விரைவாக மக்களைச் சென்றடைந்தன.

 

இதுவரை காலமும் ஒன்றாகவே கையாளப்பட்டு வந்த தபால்துறையானது 1980 ஓகஸ்;ட் 15ம் திகதி தபால் மற்றும் தந்திச் சேவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு தந்திக்கு துரிதவசதிகள் செய்யப்பட்டன. 1981ல் அஞ்சல்முகவர் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ன. மேலும்ää 1989. ஒக்டேபர் 1ல் ஈஎம்எஸ். என்னும் விரைவுத்தபாற்சேவை ஆரம்பிக்கப்பட்டதுää 1990 ஜூலை 2ல் ஸ்பீற் போஸ்ற் எனப்படும்; அதிவிரைவுத் தபாற்சேவை பரீ;ட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. 1992ல் தபால்திணைக்களத்தில் மாகாண ரீதியிலாக நிர்வாகப்பரவலாக்கம் ஏற்ப்டுத்தப்பட்டதும் ; பிராந்திய ரீதியில் அஞ்சல்அறிமுகஅட்டை வழங்கப்பட்டது. மேலும்ää இதே ஆண்டுää தொலைநகல் (பெக்ஸ்) சேவைப் பரிமாற்றமும்ää தொடங்கியது. 1992ல் இதுவரை காலமும் அஞ்சலதிபர்களாக ஆண்கள் மட்டுமே கடமையர்றறிய நிலையிலிருந்து மாறி பெண்களும் அஞ்சல்அதிபர் சேவையில் நியமிக்கப்பட்டனர். 1994ல் கொழும்புக்கு வெளியே அஞ்சல் பொதி ஒப்படைப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 1996ல் தபால்தரம்பிரிப்பை மேலும் இலகுவாக்கும் பொருட்டு; ஒவ்வோர் ஊருக்கும் தபால்குறியீட்டு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. (உதாரணம்: சாய்ந்தமருது அஞ்சல் குறியீ;டு இலக்கம் 32280) 1999ல் தபால்திணைக்களம் கணிணிமயமாகத் தொடங்கியது.

 2000ம் ஆண்டில் இலங்கையின் பலபாகங்களிலும் தபால்துறை கணிணியைப்பயன்படுத்த ஆரம்பித்தது. தொடர்ந்து 2001ல் இணையத் தளம்ää மின்னஞ்சல்ää ஒன்லைன் சேவை என தபால்திணைக்களத்தின் சகல செற்பாடுகளும்;; அதிநவீன மின்னியல் உலகத்தினுள் பிரவேசித்தன. தற்போது அநேகமாக அனைத்து தபால்நிலையங்களிலும் ஒன்லைன் வாயிலாக மின்பட்டியல் கொடுப்பனவுää வெளிநர்டுக்கடிதங்களுக்கான ஒப்படைப்பு அறிவிப்பு இலத்திரனியல் காசுக்கட்டளைச் சேவை (ஈமணிஓடர்) தபால் பணப்பரிமாற்றச் சேவை (பீஎம்.ரீ) என்பன புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு துரிதகதியில் சேவையாற்றப்பட்டு வருகின்றன. ரெலிகொம் நிறுவனத்தின் முற்கொடுப்பனவு அட்டைகளும் விற்பனைக்குள்ளன.

 அத்துடன் தற்போது இலங்கை முழுவதும்ää 609 அஞ்சல் அலுவலகங்களும்ää 3440 உப தபால் நிலையங்களும்ää 536 முகவர் தபால் நிலையங்களும்ää 46 தபால்கடைகளும் இயங்கிவருகின்றன. இவற்றில் திணைக்களத்தின்ää வழமையான சேவைகளானää அஞ்சல் முத்திரைää முத்திரையிடப்பட்ட பொருட்கள்ää எழுதுகருவிகள்ää தொலைபேசி அழைப்புக்கள்ää பிரித்தானிய தபாற் கட்டளைää தொகை அஞ்சல் பொருட்கள் பாரமெடுத்தல்ää சமுகசேவைக் கொடுப்பனவுகள்ää (சயரோகம்ää தொழுநோய்ää புற்றுநோய்ää வறியவர்களுக்கான ஆதாரப் பணக் கொப்பனவுகள்)ää விவசாய மீன்பிடியாளர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுää பரி;ட்சைக்கட்டணம் வாகனத்தண்டப்பணம் செலுத்துதல்ää விரைவுத் தபாற்சேவைää தபால் தேசிய சேமிப்பு வங்கிச் சேவைகள்ää தபால்பெட்டி மற்றம் தபால்பை சேவைகள்ää தந்திச் சேவைகள்ää தொலைநகல்ää போட்டோ பிரதிகள்ää பதிவஞ்சல் மற்றும் சாதாரண கடிதச் சேவைகள்ää உண்ணாட்டு வெளிநாட்டு பொதிச் சேவைகள்ää காப்புறுதிக்கடித சேவைகள்ää அஞ்சல் அறிமுக அட்டைää புதினப்பத்திரிகைகள் பதிவு செய்தல்ää என்பவற்றுடன் மேலும் பல நவீன காலத்திற்கு வேண்டிய புதிய பல சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன.

 புராதன காலத்திலிருந்து அதிநவீன காலம் வரை அனைத்துலக மக்களுக்கும் தனது ஈடினையற்றதும்ää அர்ப்பணிப்புமிக்கதுமான புனித சேவையை எவ்விதப்பாகுபாடுமின்றி ஆற்றிவரும் தபால்துறையினருக்காக ~உலகதபால்தினம் பிரதி வருடமும் ஒக்டோபர். 9ம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.0

No comments:

Post a Comment